9.11.08

ம‌ற‌ப்ப‌தும் ம‌றுப்ப‌தும்


உன் மெல்லிய விரல்களின்
முதல் தீண்டல்...


ஆசையாய் நீ கொடுத்த
அன்பு முத்தம்...

அடை மழைக் குளிரிலும்
அனலாய் உன் மூச்சுக் காற்று...


இறுக்கி அணைத்துக் கொன்டு
நீ பாடிய காதல் கவிதை....


இன்னும் என் மனதில் அழுத்தமாய் இருக்க‌
இயல்பாய் சொல்கிறாய் "என்னை மறந்துவிடு" என்று...


இப்போது தான் புரிகிற‌து
ம‌ற‌ப்ப‌தும் ம‌றுப்ப‌தும் ஆண்க‌ளின் இய‌ல்பு தான் என்று....