10.11.08

பதில் என்ன?


அணைத்துப் பேசிய உன்
அருகாமைகளின் அர்த்தம் என்ன?

மோகத்தில் நீ கொடுத்த
முத்தங்களின் மொழி என்ன?

ஏக்கத்துடன் நீ பார்த்த
பார்வைகளின் பொருள் என்ன?

காதலில் நீ கொடித்த
கனவுகளின் கதி என்ன?

காதல் தேர்வில்
விடையேதும் தெரியா மாணவி நான்..

சொல்லிவிட்டுப் போயேன்
கைவிட்டுச் சென்ற காரணத்தையாவது..

9.11.08

காதல் அழிவதில்லை


அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை . உடல் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது .

"நான் சொன்ன வேலையை செய்யலைனா என் வார்த்தைக்கு மரியாதை இல்லைன்னு அர்த்தம். என் வார்த்தைக்கு மரியாதை இல்லேன்னா எனக்கும் மரியாதை இருக்காது. மரியாதை இல்லாத இடத்துல நான் இருக்க மாட்டேன் ." அருண் பேசிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.


மீனு வீட்டை எதிர்த்து அருணை காதலித்து கரம் பிடித்து இப்போது அமெரிக்கா வந்து கிட்ட தட்ட ஏழு மாதங்கள் இருக்கும்.

இந்த ஏழு மாதங்களில் காதல் கசந்து விட்டதா ? மீனு குழம்பினாள்.

அருண் வரும் நேரம் ஆனது. தினமும் மாலை இருவரும் வெளியே நடந்து செல்வது வழக்கம். மீனு கிளம்பி இருந்தாள்.

அருண் அலுவலகம் முடிந்து வந்தான். மீனு காபி டம்ளரை கொண்டு வந்து அருணிடம் நீட்டினாள். அவனும் வாங்கிக் கொண்டான்.

மௌனம் நீடித்தது.

வெளியே கிளம்பினர். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.


அது ஒரு அழகிய இடம். நீண்ட குறுகிய சாலையின் இரு பக்கங்களிலும் பசுமையான மரங்கள். லேசாக மழை தூறியது. மீனு இயற்கையின் அழகை ரசிப்பவள். அதை கண்டு வியப்பவள்.


ஆனால் இன்று அவளால் ரசிக்க முடியவில்லை. அவள் மனம் கனத்திருந்தது. அருண் ஒரு வார்த்தை பேச மாட்டனா என மனம் துடித்தது.


மெதுவாக அவன் கையை பற்றினாள். அருண் முகத்தில் எவ்வித சலனமும் தெரியவில்லை.



ஆனால் அவன் மனதில் ஒரு ரசாயன மாற்றமே நடந்தது. குற்ற உணர்ச்சி அவனை குறுகச் செய்தது. வீட்டை எதிர்த்து தன்னையே நம்பி வந்தவளிடம் தான் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என வருந்தினான். இருந்தாலும் அவனின் ஆண் மனம் அவனை பேச அனுமதிக்கவில்லை .

மீனு மெதுவாக அவன் தோளில் சாய்ந்தாள். அந்த கணத்தில் அவன் முழுவதுமாக உருகிப்போனான்.


மீனுவின் கையிலிருந்து தன் கையை விடுவித்து அவள் தோளில் வைத்தான்


"மீனு பேபி சாரி டா... நான் அப்படி பேசியிருக்க கூடாது. கோபத்துல பேசிட்டேன். சாரி மா....லவ் யூ சோ மச்..." அவள் முகம் பார்க்கவே அருணுக்கு வெட்கமாக இருந்தது.


"பரவாயில்லை அருண்.... என் மேல் கோபப்படுற முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு. "-மீனு.

இருவரும் சந்தோசமாக பயணத்தை தொடர்ந்தனர்.



ம‌ற‌ப்ப‌தும் ம‌றுப்ப‌தும்


உன் மெல்லிய விரல்களின்
முதல் தீண்டல்...


ஆசையாய் நீ கொடுத்த
அன்பு முத்தம்...

அடை மழைக் குளிரிலும்
அனலாய் உன் மூச்சுக் காற்று...


இறுக்கி அணைத்துக் கொன்டு
நீ பாடிய காதல் கவிதை....


இன்னும் என் மனதில் அழுத்தமாய் இருக்க‌
இயல்பாய் சொல்கிறாய் "என்னை மறந்துவிடு" என்று...


இப்போது தான் புரிகிற‌து
ம‌ற‌ப்ப‌தும் ம‌றுப்ப‌தும் ஆண்க‌ளின் இய‌ல்பு தான் என்று....

8.11.08

காதல் முரண்பாடு


ஏன் இந்த முரண்பாடு?

காயப்படுத்துவதும் நீ

காயத்திற்கு மருந்து போடுவதும் நீ

7.11.08

தற்கொலை


நீ பறிக்காத

உன் தோட்டத்து பூக்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்கின்றன..

உன் விரல் படவில்லை என்ற‌ ஏக்கத்தில்...

திருமணம்


என் முகவரியை
உன்னுள்ளே தொலைத்து விட்டேன்
"திருமணம்"

கண்கள்



வெண் மேகங்களின்

நடுவே கருப்பு நிலா

"அவள் கண்கள்"

கணவன்




அத்தையின் கருவிலிருந்து

என் குழந்தை

கணவன்

கூந்தல்


என்ன அதிசயம்
கருப்பு நிறத்தில் அருவி
"அவள் கூந்தல் !!! "

என்ன பேசலாம்?



என்ன பேசலாம்?
நேற்றிரவு பார்த்த திரைப்படம்
புதிதாய் வாங்கிய பட்டுப்புடவை
காலையில் படித்த நாளிதழ் செய்தி
அடுத்தவாரம் போகவிருக்கும் சுற்றுலா...
அழைப்பின் காரணம் உன்
குரல் கேட்பதாய் மட்டும் இருந்தாலும்
இப்ப‌டி எதயாவ‌து யோசித்துக் கொண்டேன்
உன்னிட‌ம் பேச‌...
பத‌ற்ற‌ம்.... த‌ய‌க்க‌ம்... ப‌ய‌ம்...
எல்லாவ‌ற்றையும் க‌ட‌ந்து உன் எண்க‌ளை அழுத்த‌
ம‌றுமுனையில் உன் குர‌ல்
"தூங்கிட்டு இருக்கேன். அப்புற‌ம் பேசு"