Sunday, March 29, 2020

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம்

என்ன  இது புதுசா இருக்கு?

 
எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்க என்னன்னா தோற்க கற்றுக்கொள்வோம்னு இருக்கேனு பாக்குறீங்களா? ஆமா, எல்லாரும் வெற்றின்ற ஒரு விஷயத்துல மத்த ஒன்ன மறந்துடுறோம். ஒன்னு மட்டும் இல்ல நெறய மறந்துடுறோம். என்னனு கேக்குறீங்களா?

ஏதோ, ஒரு போட்டியோ அல்லது ஒரு தேர்வோ நாம ஜெய்ச்சவங்களையும் முதல்ல வந்தவங்களையும் மட்டுமே கொண்டாடுறோம். போற்றி புகழுறோம். மத்தவங்களை என்னைக்காவது நினைச்சி பாத்திருக்கோமா? உண்மையை சொல்லனும்னா நினைக்குறது இல்ல.

எதார்த்தமா சொல்லனும்னா தேர்வோ, போட்டியோ இங்க அது ஒரு சண்டையாகவும், நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற மோதலாக தான் இருக்கு. தவிர, போட்டி என்பது நம் திறமையை வளர்த்துக்குற ஒரு நிகழ்வாகவும், தேர்வை நம் அறிவை பண்படுத்துற விசயமாகவும், அதாவது அறிவை சுயபரிசோதனை செஞ்சிக்கிற ஒரு விசயமா நாம இது வரைக்குமே பார்ப்பதில்ல.

மாறா,  இங்க என்னவா பாக்குறாங்கன்னா, போட்டியை ஒரு மானம் சார்ந்த பிரச்சனையாவும், தோல்வியை ஒரு கேவலமான முடிவாகவும் தான் இந்த உலகமும், சமூகமும் நமக்கு கத்து கொடுக்குது. ஆனால், அது மோசமான முட்டாள் தனம்னு தான் சொல்லனும். மனிதர்கள் நாம கத்துகிட்டா தான அதுல வெற்றி பெற முடியும். வெற்றி பெறலன்னா நாம இன்னும் கத்துக்குனும்னு தான அர்த்தம். சரி தான நான் சொல்றது...!!

எல்லா வெற்றியும், தோல்வியில் இருந்து தான ஆரம்பம் ஆகுது. தோல்வி என்பது வீழ்வது அல்ல. வெற்றி பெற பயிற்சி எடுப்பது. பாத்திங்கனா, ஐன்ஸ்டீன் மின்சாரத்தை கண்டுபுடிக்கரத்துக்கு முன்னாடி ஒரு லட்சம் தடவை தோற்று போனாராம். எல்லாமே தோல்வியில தான் முடுஞ்சதாம். அதுக்கப்புறம் கொஞ்ச கொஞ்சமா கத்துகிட்டு தான் நாம இன்னைக்கு பயன்படுத்துற மின்சாரத்தையே கண்டுபுடிச்சாராம்.

தோல்வின்றது வீழ்வது அல்ல. நாம் எழ கத்துக்கிறது. வீழ்வது தப்பில்லை எழ முயற்சிக்காம இருப்பது தான் தப்பு!

என்னாங்க தோற்று போகலாமா, ரெடியா?

Monday, October 28, 2019

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்

......................................
"குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்."
.................................

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன், என்ன வேலை இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுடன் சிறிது நேரமாவது, உரையாட வேண்டும்.

அந்தக் குழந்தைகளிடம், அரவணைப்புடன், "இன்னிக்கு ஸ்கூல்லே என்ன நடந்துச்சு.? என்று அன்பாக விசாரிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைக்கு, பள்ளியில், ஏதும் மன ரீதியான பாதிப்புகள் இருந்தால், உடனே அதைக் களைய முயற்சி செய்ய வேண்டும்.

இப்படி நீங்கள் அன்பாகப் பேசினாலே போதும். குழந்தைகள், எப்போதும் உங்கள் பக்கம் தான்.

அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது, பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதைச் சொன்னால் அம்மா அடிப்பார்கள், என்ற பயம் இல்லாமல், எதைப் பற்றியும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

அப்போது தான் வெளியில் அவர்களுக்கு நடக்கும் கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

அன்புமதி ஒரு 10 வயது சிறுவன். அவனது தந்தை தனது மகனுடன் நேரத்தை செலவிட முடியாத மிகவும் ஓய்வில்லாத தொழிலதிபர்.

அன்புமதி தனது தந்தையின் கவனத்திற்காக ஏங்கினான். அவன் தனது நண்பர்களைப் போலவே வெளியில் சென்று தந்தையுடன் விளையாட விரும்பினான்.

ஒரு நாள், மாலையில் தனது தந்தையை வீட்டில் பார்த்த மகன் ஆச்சரியப்பட்டான். 'அப்பா, உங்களை வீட்டில் பார்ப்பது ஒரு பெரிய ஆச்சரியம்" என்று கூறினான்.

'ஆமாம் மகனே, என் அலுவலகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே நான் வீட்டில் இருக்கிறேன். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து நான் விமான நிலையத்திற்குச் செல்வேன்" என்று அவனது தந்தை பதிலளித்தார்.

அன்பு சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்னர் அவன், 'அப்பா, நீங்கள் ஒரு நாளில் அல்லது அரை நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

தந்தை குழப்பம் அடைந்து மகனிடம்'நீ ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறாய்?" என்று கேட்டார்.

ஆனால் விடாப்பிடியாக 'ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

'ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 ஆயிரம் இருக்கும்" என்று பதில் அளித்தார்.அன்பு தனது அறைக்கு ஓடி, தனது சேமிப்புகளைக் கொண்ட உண்டியலுடன் கீழே வந்தான்.

'அப்பா, எனது உண்டியலில் 20 ஆயிரம் சேர்த்து இருக்கிறேன்.
எனக்காக இரண்டு மணி நேரத்தை ஒதுக்க முடியுமா?
நான் கடற்கரைக்குச் சென்று நாளை மாலை உங்களுடன் இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன். இதை உங்கள் அட்டவணையில் சேர்க்க முடியுமா?" என்று கேட்டான். தந்தை பேச்சற்று இருந்தார்!

ஆம்..,நண்பர்களே..

நீங்கள், எவ்வளவு செலவு செய்து, குழந்தைக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தாலும், நீங்கள் குழந்தகளுக்கு ஒதுக்கும் நேரம்  ஒன்று தான், அந்தப் பணத்தை விட உயர்ந்தது"

Monday, October 21, 2019

தகுதி அறியாத இடத்தில் இருக்காதே

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,
*மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு   விலை மதிப்பீர்கள்  என்று கேட்டுப்பார்* என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம்
*இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும்* என்றனர்.

தந்தை, பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு,தந்தையிடம், இதற்கு 5000  டாலர் தரமுடியும் என்றனர்,

தந்தை, இதனை நூதனசாலைக்கு museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார்* என்றார்,

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், *நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குற்படுத்த ஒரு வரை வரவழைத்து பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்* என்றனர்.

தந்தை, மகனைப் பார்த்து, மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.

உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே

இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...