Friday, January 27, 2017

செயலும் விளைவும்

அழுவதன் மூலம் தடுக்க கூடியது எதுவுமில்லை.
சிரிப்பதன் மூலம் அடையக் கூடியது எதுவுமில்லை.
துடிப்பதன் மூலம் எந்த பரிகாரமும் கிடைப்பதில்லை.

நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு 
தீமை செய்தவனை மறந்து விடு 
நீ முடிந்தால் நன்மை செய் தீமை செய்யாதே 

மனிதனுக்கு மனிதன் அபிமானத்தை வளர்த்தால்
மனிதன் உள்ளத்திற்குள்ளேயே தெய்வம் தோன்றி விடுகிறது 

நம்மை அறியாமல் வருவது 
நாம் அறியாமலே தீர்க்க படுகிறது 
நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்து விட முடியும்.

கோபம் முதல் கட்டத்தில் வென்றது போல் தோன்றினால் 
நிரந்தரமாகக் தோல்வியடைய போகிறது என்று பொருள். 

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு 
நிதானம் தான் அற்புதமான ஆயுதமே 
தவிர கோபமல்ல 










Thursday, January 26, 2017

குறை சொல்லாதே

1.நீங்கள் செய்யும் தவறுகளை ஒப்புகொள்ளுங்கள்

2.மற்றவர்களின் குறைகளை மென்மையாக சுட்டி காட்டுங்கள்

3.தவறுகள் நாமும் செய்யகூடியது என்பதை உணருங்கள்

4.வாக்குவாதம் செய்யாதீர்கள்

5.தினம் ஒரு புதிய நட்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள்

6.நண்பர்களை ஒவ்வொரு வெற்றியின் போதும் உற்சாக படுத்துங்கள்

7.மனம் விட்டு சிரியுங்கள்

8.உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை வையுங்கள்

9.நன்றி, தயவு செய்து, மன்னிக்கவும் வார்த்தைகளை உபயோக படுத்துங்கள்.

10. பதட்டம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்

11.நண்பர்களின் நல்ல நாட்களில் வாழ்த்து தெரிவியுங்கள்

12.புன்னகை செய்யும் பொது மனம் குதுகளிப்பதை உணருங்கள்

13.உற்சாகமாக இருங்கள் உற்சாக படுத்துங்கள்.

14. இன்று எத்தனை பேரிடம் இனிமையாக பழகினோம் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள்.

15. அனைவரிடம் அன்பாக இருங்கள்.



Wednesday, January 11, 2017

தன் வினை தன்னைச் சுடும்

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை

நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்.

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!

கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;

கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!

காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்....

பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ

மட்டுமே இருந்தது!.......

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!

அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!

நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!

‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது.

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார்!

‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .

மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!

இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!

இது தான் உலகநியதி!

நாம் எதைத் தருகிறோமோ

அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

நல்லதை தந்தால் நல்லது வரும்,...

தீமையை தந்தால் தீமை வரும்!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,

ஆனா....

நிச்சயம் வரும்!

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...