*ஒருமுறை புத்தர் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு ஒரு பணக்கரரின் வீட்டுக்குச் சென்றார்.*
*அந்தப் பணக்காரர் சினத்துடன்...
"அலைந்து திரிந்து பிச்சை எடுக்கும் சோம்பேரி வாழ்வை ஏன் நடத்துகிறீர்?
இது அவமானமாக இல்லையா?
உமக்கு நல்ல கட்டான உடல் உள்ளது. நீர் உழைக்கலாம். நான் உழுது விதைக்கிறேன். நான் வயலில் வேலை செய்கிறேன்.
எனது நெற்றி வியர்வையைச் சிந்தி அன்றாட உணவை சம்பாதிக்கிறேன்.
நான் உழைப்பு மிகுந்த வாழ்வை நடத்துகிறேன். நீங்களும் உழுது விதைத்தால் உமக்கு நல்லது. அப்போது நீரும் பெருமளவு உணவு பெறுவீர்!" என்று கூறினார்.*
*புத்தர், "ஐயா! நான் கூட உழுது விதைக்கிறேன்; உழுது விதைத்தபின் நான் உண்கிறேன்!" என்று கூறினார்.*
*"உம்மை ஒரு உழவர் என்று கூறுகின்றீர். ஆனால் அதற்கான அடையாளம் எதுவும் உம்மிடம் காணப்படவில்லை. உம்முடைய கலப்பை, எருதுகள், விதைகள் எங்கே?" என்று கேட்டார்.*
*அதற்கு புத்தர், "நான் சொல்வதைக் கூர்ந்து கேளுங்கள். நான் நம்பிக்கை என்னும் விதையை விதைக்கிறேன்.
நான் செய்யும் நற்செயல்களே விதைகளுக்குப் பாயும் பாசனநீர். விவேகமும் வைராக்கியமும் என் கலப்பையின் உறுப்புகள். என் மனமே வழிநடத்தும் கடிவாளம்.
தருமமே கைப்பிடி. தியானமே முள். சமமும் தமமும் - அதாவது, மன அமைதியும் இந்திரியக் கட்டுப்பாடும் எருதுகள்.
இவ்வாறு நான் மனம் என்னும் வயலை உழுது, சந்தேகம், மயக்கம், அச்சம், பிறப்பு, இறப்பு ஆகிய களைகளைக் களைந்தெரிகிறேன்.
அறுவடை செய்து கிடைக்கும் விளைச்சல், நிர்வாணம் என்னும் அமரத்துவம். இவ்வாறு உழுது அறுவடை செய்வதினால் எல்லாத் துயரங்களும் முடிவு பெறுகின்றன" என்று விடை தந்தார்.
அகந்தை மிகுந்த பணக்காரர் அறிவு பெற்றார். அவருடைய கண்கள் திறந்தன. அவர் புத்தரின் காலடியில் வீழ்ந்து பணிந்தார்.