Tuesday, June 20, 2017

மனத்தூய்மை -சிறுகதை

கீதை சொல்லும் பாதை !ஒரு ஊரில் வயதானமுதியவர் ஒருவர் தன்பேரனுடன் வசித்துவந்தார் . தினமும்அதிகாலையில்எழுந்து, சமையலறைமேஜை அருகில்அமர்ந்து, பகவத் கீதைபடிப்பது அவர் வழக்கம்.அனைத்துவிஷயங்களிலும்அவரைப் பின்பற்றநினைத்த பேரனும் ,கீதை படிக்க முற்பட்டான்.ஒருநாள் தாத்தாவிடம் ,நானும் உங்களைப்போல்தினமும் பகவத் கீதைபடிக்கிறேன். ஆனால் ,எனக்கு அதன் அர்த்தம்விளங்கவில்லை;புரிந்த கொஞ்சமும் ,புத்தகத்தை மூடிவைத்ததும்மறந்துவிடுகிறது.இப்படி அதைப்படிப்பதால், எனக்குஎன்ன பிரயோஜனம் ?என்று கேட்டான் .அடுப்பில் கரியைப்போட்டுக்கொண்டிருந்ததாத்தா , அமைதியாகஅந்தக் கரிக் கூடையைச்சிறுவனிடம்கொடுத்து, நதிக்குப்போய் இந்தக் கூடையில்நீர் கொண்டு வாஎன்றார். பேரனும்கூடையுடன்ஆற்றுக்கு ஓடினான்.ஆனால், மூங்கில்கூடையில் தண்ணீர்தங்குமா என்ன.? அவன்வீடு திரும்புவதற்குள்தண்ணீர் முழுவதும்ஒழுகிவிட்டது.தாத்தாசிரித்துக்கொண்டே, நீஇன்னும் வேகமாக வரவேண்டும் என்றுசொல்லி, மறுபடியும்அவனைத் தண்ணீர்எடுத்து வரஅனுப்பினார்.இந்த முறை சிறுவன்வேகமாக ஓடி வந்தான்;ஆனாலும்,வீடுசேர்வதற்குள் கூடைகாலியாகிவிட்டது.கூடையில் தண்ணீர்கொண்டு வருவதுசாத்தியம் இல்லை என்றுபுரிந்துகொண்டசிறுவன்,வாளிஒன்றைக் கையில்எடுத்தான். ஆனால்தாத்தாவோ, எனக்குவாளியில் நீர்வேண்டாம்.கூடையில்தான்வேண்டும்.நீ இன்னும்தீவிரமாக முயற்சி செய்என்று அவனைமறுபடியும் ஆற்றுக்குஅனுப்பினார்.இந்தமுறையும் அவனால்தண்ணீர் கொண்டுவரமுடியவில்லை.போங்கதாத்தா, இது பயனற்றவீண் வேலை.! என்றான்,மூச்சு வாங்கியபடி.அவனைப் பார்த்துபுன்னகைத்த தாத்தா,நீஇதைப் பயனற்றதுஎன்கிறாய். ஆனால்,கூடையைப் பார்,தெரியும் என்றார்.பையன் கூடையைப்பார்த்தான்.முதல்தடவையாக அதுமுற்றிலும் வேறாகமாறியிருப்பதைக்கண்டான்.பழைய, கரிபடிந்த கூடை,இப்போது உள்ளும்புறமும் சுத்தமாகிப்புத்தம் புதியது போல்காணப்பட்டது!தாத்தா சொன்னார்:குழந்தாய்!கீதை படிக்கும்போதுஇதுதான் நமக்கும்நேர்கிறது.உனக்குஅர்த்தம் புரியாமல்இருக்கலாம்; நினைவில்நிற்காமல் போகலாம்.ஆனால், நீ உள்ளும்புறமும்தூய்மையடைந்துமுற்றிலும் புதியமனிதனாகிவிடுவாய்.!இது கீதாச்சார்யனானக்ருஷ்ண பரமாத்மா, நம்வாழ்வில் நிகழ்த்தும்அற்புதம் !

No comments:

Post a Comment

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...