Saturday, July 29, 2017

கடவுள் சோதிப்பதில்லை

கடும் புயலில் சிக்கிய கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.
அதில் ஒருவன் நாராயணா என்னை காப்பாற்று என்று கதறி வேண்டுகிறான்.  அருகிலுள்ள தீவு ஒன்றில் கடலலை அவனை கரை ஒதுக்கியது .

அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லாத இடத்தை கண்டு பயந்தவாறு
“நாராயணா"  இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.
ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று வேண்டுகிறான்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கிடைக்கும் என்று தினமும்  எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான்.
எதுவும் உதவி கிடைத்தபாடில்லை.
இப்படியே நாட்கள் ஓடுகின்றன.
தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்களை வைத்து  ஒரு சிறிய குடிசை கட்டுகிறான்.

இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன.
இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை.

கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை காப்பாற்றுவார் நம்பிக்கையுடன்  ஒரு நாள் இவன்

உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை

திடுக்கிட வைத்தது.

இவன் தங்கி  இருந்த ஒரே குடிசையும்  தீப்பிடித்து வானுயுற எழும்பிய புகையுடன் எரிந்துகொண்டிருந்தது.
குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன.
அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது.

“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன்.
நீ என்னடாவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் இருந்த  தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.

“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.
கப்பலில் இருந்தவர்கள் அவனை காப்பாற்றினார்கள்.

நான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்.

யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி உதவி கேட்கிறார்கள்  என்று நினைத்தோம்” என்றனர் .
அப்போது ஸ்ரீ மன் நாராயணன்  குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வேதனைப்பட்டான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக நினைத்து விடுகிறோம்.

நம்மை காக்கவே (மீட்கவே) அவர் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறார்.
அவருடைய செயல்கள்  அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால் எல்லாம் நலமே.

"ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே  சரணம்"

No comments:

Post a Comment

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...